நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலம் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலம் மூலம் கடந்த 2009ம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதல் முறையாக தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அது நீரின் மூலக்கூறாஅல்லது ஹைட்ரஜனின் மூலக்கூறா சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது நிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சந்திரன் அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியில் இருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா தற்போது கண்டறிந்துள்ளது. மேலும் சந்திரனில் இதுபோல் காணப்படும் தண்ணீர் அதிக அளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.